Tuesday, February 12, 2013

அருள்மிகு தங்கம்மன் திருவருட்பாடல்கள் 3



எங்கள் தாய் தங்காத்தா

தங்காத்தா தங்காத்தா தாயே எங்கள் தங்காத்தா
கொடுமணலாம் ஊரினிலே கொலுவிருக்கும் தங்காத்தா
ஆற்றங்கரை ஓரத்திலே அமர்ந்தவளே தங்காத்தா
அருள்கொடுத்து காப்பவளே அன்னை எங்கள் தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

ஏழுபேர் கன்னியரே இணைபிரியால் தங்காத்தா
எங்கள்குல தேவதையே வானமகளே தங்காத்தா
புற்றினிலே வாழ்பவளாம் புகழ்நிறைந்த தங்காத்தா
புதுமைபல செய்பவளே அருள்மகளே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

சேரகுல மக்களுக்கு சிறப்புத்தரும் தங்காத்தா
பாண்டியகுல மக்களையே பாதுகாக்கும் தங்காத்தா
பனங்காடை குலதவர்க்குப் பக்கத்துணை தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

ஆதிசக்தி நாயகியே எங்கள் தாயே தங்காத்தா
அனைத்துலகும் நிறைந்தவளே எங்கள் தாயே தங்காத்தா
சோதிவடி வானவளே எங்கள் தாயே தங்காத்தா
சுகமனைத்தும் தருபவளே எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

மஞ்சள் மடை வாழ்பவளே எங்கள் தாயே தங்காத்தா
மகிமைபல கொண்டவளே எங்கள் தாயே தங்காத்தா
ஆற்றங்கரை நாயகியே எங்கள் தாயே தங்காத்தா
உன் அருள் வேண்டி வந்தோமம்மா எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

தேடிவந்த மக்களுக்கு எங்கள் தாயே தங்காத்தா
தேவி நீயும் துணைவருவாய் எங்கள் தாயே தங்காத்தா
உனைநாடிவந்த மக்களுக்கு எங்கள் தாயே தங்காத்தா
நன்மை எல்லாம் தருபவளே எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

துன்பமெல்லாம் நீக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
துயரமெல்லாம் போக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
கஷ்டமெல்லாம் நீக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
கவலையெல்லாம் போக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

நோய்நொடிகள் தீர்ப்பவளேதா எங்கள் தாயே தங்காத்தா
நூறாண்டு வாழவைப்பாய் எங்கள் தாயே தங்காத்தா
வெள்ளைநாகன் வடிவினிலே எங்கள் தாயே தங்காத்தா
வேண்டும்வரம் தருபவளே எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

ஐந்துசுற்று கல்கோட்டை எங்கள் தாயே தங்காத்தா
அழகுமணி மண்டபங்கள் எங்கள் தாயே தங்காத்தா
எழுசுற்று கல்கோட்டை எங்கள் தாயே தங்காத்தா
எழிலான மண்டபங்கள் எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

பத்துசுற்று கல்கோட்டை எங்கள் தாயே தங்காத்தா
பளிங்குமணி மண்டபங்கள் எங்கள் தாயே தங்காத்தா
மண்டபத்துக் குள்ளிருந்து எங்கள் தாயே தங்காத்தா
உன் மக்களையே காத்திடுவாய் எங்கள் தாயே
தங்காத்தா

(தங்காத்தா தங்காத்தா)

-தங்கம். வீ. இராமசாமிக்கவுண்டர்

No comments: