Tuesday, February 12, 2013

கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு 1



அருள்மிகு தங்கம்மன் துணை
கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு
(சிறு குறிப்பு)

கொங்கு நாடு

கொங்கு நாடு என்பது தற்போதைய கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களையும் திருச்சி மாவட்டத்தில் கரூர், குளித்தலை பகுதிகளையும், தர்மபுரி மாவட்டத்தின் தெற்குப் பகுதியையும் உள்ளிட்ட நிலப்பரப்பாக இருந்தது.

கொங்கு நாடு மலைபகுதிகளைக் கொண்டதாகவும் நிலப்பரப்புகளில் காடுகள் நிறைந்த வனப்பகுதியாகவே இருந்திருகிறது. இப்பகுதியில் ஓர் சில முக்கிய ஊர்கள் மட்டுமே இருந்து அதில் மக்கள் வாழ்ந்து வந்தனர். காட்டுப்பகுதியில் வேடர், வேடுவர் போன்ற இனத்தார்கள் வாழ்ந்தனர். இவர்கள் மிருகங்களை வேட்டையாடியும் பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றையும் உணவுக்காக பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர்.

இந்த கொங்கு நாட்டுப் பகுதியை அவ்வப்போது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர் என்பது வரலாறு கூறும் செய்தியாகும்.

சில காலங்களில் கொங்குநாடு இம்மூவேந்தர் அல்லாத பிற மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்திருக்கிறது.

குடியேற்றம்
வெகுகாலத்துக்கு முன் நமது முன்னோர்கள் சோழ, நாட்டுப்பகுதியில் இருந்து இந்த கொங்கு நாட்டுப் பகுதியில் குடியறியதாக வரலாறுகள் கூறுகின்றன. அப்படி குடியேறிய மக்கள் அதுசமயம் கொங்குநாட்டுப் பகுதியை தாரபுரத்திலிருந்து ஆட்சி செய்து வந்த சேர மன்னர்களின் அனுமதி பெற்று பல்வேறு இடங்களில் குடியமர்ந்தார்கள்.

இவர்கள் தண்ணீர் வசதியை முன்னிட்டு பெரும்பாலும் ஆற்றங்கரைப் பகுதிகளிலயே குடியேறி காடுகளைத் திருத்தி விவசாய நிலங்களாக்கி பயிர்த்தொழில் செய்து வந்தனர்

No comments: