Tuesday, February 12, 2013

அருள்மிகு தங்கம்மன் திருவருட்பாடல்கள் 2



தருவாய் தங்கம்மா
கொங்குத் திருநாட்டில் நிறைந்தவளே
கொடுமணல் காணியிலே வளர்ந்தவளே
காஞ்சிநதிக் கரையோரம் அமர்ந்தவளே
மஞ்சள்மடையில் மகிமைகள் புரிந்தவளே

ஏழுபேர் கன்னியரே தங்கம்மாநீ
எங்கள்குலம் காத்திடவே வாருமம்மா
நான்குகுல மக்களுக்கு தாயுமானாய்
நாயகியே தங்கம்மா எங்களம்மா

செல்வம் மிகுந்திடவே அருள்புரிவாய்
திக்கெட்டும் புகழ்பரவ ஒலிதருவாய்
உறுதியுடன் செயல்புரிய பலம்கொடுப்பாய்

பக்தியுடன் உந்தனையே நினைப்பவர்க்கு
பக்கத்தில் நீயிருந்து துணைவருவாய்
உன்நாமம் துதிப்பவர்க்கு உடனிருந்து
உயர்வுசெயவாய் எங்கள்ம்மா தங்கம்மாவே!

No comments: