Tuesday, July 24, 2012

நான் இப்பொழுது

எண்ணங்கள் வார்த்தைகளாக வடிவம் பெறுகிறது...
தகுதி கொண்டு பறைசாற்ற வழி தேடுகிறேன்,
மொழியின் அவமதிப்பா!
நான் கொண்ட கடவுளின் மறுதலிப்பா!
வினைப்பயன் என கொள்ளவா?
கலியுகம் உண்டோ?
இயேசு வருவரோ?
ஆன்ம பலம் தோற்குமோ?
எதை நோக்கி செல்வது?
உள்ளும் புறமும் தாளிட்டுகொள்கிறது
என் சுயம் தேட வழியின்றி....
உடலில் ஓடும் நதிகளை
ஒவ்வொன்றாக நசுக்கி
மனக்கடலினடியில்
எறிந்துகொண்டிருக்கிறான்..
ஒப்பனைகளுக்கு பஞ்சமில்லை,
இன்னும் சொல்வதென்றால்
உணரவற்ற பொழுதுகளில்
நிர்வாணமாகப்படுவது வேசிகள் மட்டுமல்ல ...