Tuesday, February 12, 2013

கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு 2



காணியாளர்
இவ்வகையில் சேலம் பகுதி சிந்தாளந்தூரில் இருந்து சேரன் குலத்தவரும், பழனி பகுதி மானூரில் இருந்து பாண்டியன் குலத்தவரும், ஈரோடு பகுதி எலுமாத்தூரில்இருந்து பனங்காடை குலத்தவரும் காஞ்சிமாநதி என்கிற நொய்யல் கரையில் குறிப்பு நாடு கொடுமணல் கிராமத்தில் குடியேரினார்கள் என்றும் அப்போது இங்குவாழ்ந்து வந்த கொங்க செட்டியார்களிடமிருந்து பொருள் கொடுத்து நில ( கொடுமணல் காணி) உரமை பெற்றனர் என்றும் கொடுமணல் வரலாற்றுச் சுவடிகள், பட்டயங்கள் மூலம் தெரியவருதிறது.

குலதெய்வம்
இவ்வண்ணம் குடியேறிய மக்கள் கொடுமணல் பகுதியில் நொய்யல் ஆற்றில் சோழமன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அணையின் கரையில் தாங்கள் முன்னாளில் குடி இருந்த ஊர்களில் இருந்து கொண்டு வந்த தெய்வத் திருவுருவங்களை வைத்து கோயில் கட்டி குல தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.
யார்கள் முன்னாளில் சோழ நாட்டுப் பகுதியில் வாழ்ந்த போது கரூருக்கு கிழக்கே காவிரிக்கரை ஓரம் மதில் கரை (தற்போது மாயனூர்) என்ற இடத்தில செல்லாண்டியம்மனை எழுந்தருளச்செய்து குலதெய்வமாக வழிபட்டு வந்தார்கள் என்று கொங்கு வேளாளர் வரலாற்றுப் பட்டயங்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

முற்காலத்தில் விஜய நகர மன்னர்களின் ஆட்சியில் அவர்களின் தென்னாட்டு(மைசூர்) ஆட்சிப் பிரதிநிதியாக இருந்த நஞ்சராய உடையார் என்பவர் காலத்தில் பழையகோட்டை மன்றாடியார் மரபினரான பயிரன் கூட்டத்தார்களும் கொடுமனல்நில (காணி) உரிமை பெற்றனர் என்று பழையகோட்டை வரலாறு கூறுகிறது.

தென்காசிப்பகுதி வாதவனல்லுரில் இருந்து காங்கயம் பகுதியில் குடியேறிய தேவர் இன கணக்கன் கூட்டாத்தார் சுமார் மூன்னுற்றி எண்பது (௩௮௦) ஆண்டுகளுக்கு முன் பழையகோட்டை மன்றாடியார் வழிவந்த விசுவனாதச்சர்கரை மன்றாடியார் அவர்களிடமிருந்து கொடுமணலில் நில (காணி) உரிமை பெற்றதாக கணக்கன் கூட்டத்தார் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் நொய்யல் அணை ஓரத்தில் நாச்சிமார் என்ற பெயரில் கன்னிமார் வைத்து வழிபாடு செய்து வந்தாதாகவும் மேற்படி பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது

இப்படியாக கொடுமணல் கிராமத்தில் காணி பெற்ற கொங்கு வேளாளர்களில் சேரன், பாண்டியன், பனங்காடை குலத்தவர்களும் தேவர் இனத்தவரில் கணக்கன் கூட்டத்தாரும் சப்தமாதக்களை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தனர் என்பது பழங்காலப் பாடல்களிலும் பட்டயங்களிலும் காணப்படுகிறது.
அத்தெய்வம் தங்கைமார், கன்னிமார், தங்கமார், தங்கமாரம்மன் என்று பல பெயர்களில் வரலாற்றுச் சான்றுகளிலும் பழம்பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் தங்கம்மன் என்கிற பெயர் வழக்கில் வந்து அப்பெயரே சப்தமாதக்களுக்கும் (ஏழு அம்மன்) பொதுப்பெயராக நிலைத்து விட்டது என்பதே உண்மை.

தேக்கநிலை
பிற்காலத்தில் நொய்யல் ஆற்று அணை உடைந்து கொடுமணல் பகுதியில் விவசாயம்செழிப்பின்றி வறட்சி ஏற்பட்டதின் காரணமாக இங்கு வாழ்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு முக்கியமாக மேற்குப் பகுதிகளில் சென்று குடியேறி வாழ்ந்து வரலாயினர். மேலும் இவர்கள் குடியேற்றம் பல்வேறு பகுதிகளுக்கு விரிந்து சென்றது.

நாளாவட்டத்தில் கொடுமணல் கிராமப் பகுதி நொய்யல் ஆற்றை எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு தம்மரெட்டிபாளையம் கிராமப் பகுதியில் தங்கம்மன் ஆலயம் சேர்ந்ததாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் உள்ளூரில் இருக்கும் குல மக்கள் ஆலயத்தை சரியாக பராமரிப்பு செய்யாததாலும் தங்கம்மன் ஆலயம் பின்னப்பட்டுப் போய் சிதைந்த நிலை ஏற்பட்டது.

ஆயினும் ஆங்காங்கு வாழ்கின்ற மேற்படி குலங்களைச் சேர்ந்த மக்கள் அவ்வப்போது தங்கம்மன் ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்து கொண்டு இருந்தனர்.

No comments: