Wednesday, November 23, 2011

கொலைவெறி

ஒய் திஸ் கொலைவெறி பாட்டு கண்ணு மண்ணு தெரியாம ஹிட்ஸ் அடிச்சிட்டு இருக்கு
ட்விட்டர்ல லேட்டஸ்ட் Trendsla டாப்பு;
facebookla ஒரு இந்திகாரன் விடாம எல்லா ஸ்டேடஸ் மெசேஜ் இதுதான் .
youtubela நேத்து  1,394,256 views , இன்னைக்கு மதியம் 1,929,792 views ;
ரா ஒன் படத்துக்கு ஷாருக்ஹான் பண்ணின விளம்பரத்துல ஒரு percent கூட இவுங்க பண்ணல ஆனா 4 நாள்ல இருபது லட்சம் ஹிட்டு !
டைம்ஸ் ஆப் இந்திய , ரெடிப்ப் , ndtv நு பிச்சிகிட்டு போகுது.,
ரசனை என்ன மாதிரின்னு ஒன்னும் புரியல...


Handula glass-u, glass-la scotch-u eyes-u full-aa tear-u
Empty life-u girl-u come-u life-u reverse gear-u !!!!





Update 1:
Its about 9:35pm now and the views has crossed 2 Million hits :O (2,066,307)
Front Page cover story in Hindu :O
http://www.thehindu.com/arts/cinema/article2650957.ece#.TsziGeAKsj0.facebook 

Update 2;
Its about 3:41pm the next day and the hits has crossed : 2,866,584 views [tough time for lady gaga]



Kolaveri Di: Tamil actor Dhanush's studio rendering of bathroom crooning becomes a global rage; It stood third in the global music list giving a tough time to Lady Gaga
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/kolaveri-di-tamil-actor-dhanushs-studio-rendering-of-bathroom-crooning-becomes-a-global-rage/articleshow/10837167.cms?google_editors_picks=true

Kolaveri Dhokla launched in Gujarat as UN announces World Kolaveri Day
http://www.fakingnews.com/2011/11/kolaveri-dhokla-launched-in-gujarat-as-un-announces-world-kolaveri-day/

Kolaveri lessons for marketers
http://www.livemint.com/2011/11/23173147/Views--Kolaveri-lessons-for-m.html?h=A1

After two days number of views : 5,438,921

இன்னைக்கு தேதி 11 -12 -2011 ; youtubela கொலைவெறி ஹிட்ஸ் : 20,341,650  

Saturday, July 16, 2011

கடவுளின் பாலினம்

அண்ணன் குழந்தை, 20 மாதம் ஆகிறது. செல்ல மொழிப் பேசி அன்ன நடை பயின்றுவருகிறது.
கடந்த மாதம் முழுவதம் அலுவல், எல்லா வார நாட்களும் விடுமுறை நாட்களுமாக தொடர்ந்து ஒரு 25 நாள் வேலை. பொதுவாக இது போல் இல்லை எனினும் கணினி துறையில் எப்போ என்னவென்று எதுவும் சொல்வதற்கில்லை. இந்த இடைவேளைக்கு பிறகு திருப்பூர் சென்றிருந்தேன் வழக்கம்போல!

அள்ளி அணைத்த பேரனிடம்;
அம்மா - சச்சு யாரு இது?
குட்டி - சித்த்த்த்தா...............
அம்மா - பெங்களுருவிலிருந்து எப்ப வந்தீங்க கேளு;
குட்டி - கட்டை விரல் உயர்த்தி கை அசைத்து கேட்டது பெண்கு எப்பப்....

படர்ந்த அன்றைய நாளில் மாலை நேரம்  குழந்தை எதையோ செய்துவிட நானும் குரல் உயர்த்தி போலி கோபம் கொண்டேன். வரவேற்பறையில் என்னோடு இருந்தவன் மெல்ல எழுந்து எதோ சிந்தித்தவாறு இரு கைகள் உருட்டி கொண்டே மெல்ல அம்மாவை தேடி நடையிட சில நொடிகள் என்னை பார்பதுமாய் நடப்பதுமாய் சுவர் வரை சென்று சற்றே உருவம் மறைத்து பின் வெளி வந்து அகண்ட கை விரல் எனை நோக்கி "மூமூந்ஜ்ஜ்ஜீஈ[மூஞ்சி]" எனக் கூறி ஆண் கடவுள் காட்டினான்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு பனிரெண்டு மணி அளவில் பெங்களூரில் வீடு பக்கத்தில் இருக்கும் ஒரு ATM இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றிருந்தேன். நல்ல கூட்டம். மொத்த கூட்டமும் வங்கி வேலைக்கு வந்திருந்தவர்கள்.

ATM இல் ஒரு நபர் இரு குழந்தைகள். அண்ணனும் தங்கையும்.

பெண் குழந்தை ஒவ்வொரு பரிவர்த்தனை தாளாக வெளி இழுத்து கிழித்துகொண்டிருந்தது, அண்ணன் வேண்டாமென்று துரத்த இரண்டும் எங்கோ ஓடிச் சென்றது. பின், முன்னிருந்தவர் நகர நானும் பணம் எடுக்கப் பணிந்தேன். சில நொடிகளில் சத்தத்துடன் ஓடி வந்த குழந்தைகள் என்னை எனக்கு முன் நின்றவர் என எண்ணி சுற்றி கொண்டிருக்க பெண் குழந்தை என் மேல் தாவி ஏறியது. அள்ளிக்கொண்டு பணத்துடன் வெளி வந்து குழந்தை முகம் பார்க்க தானும் என் செய்வதறியாது எனை பார்த்தது, அப்பொழுது தன் அப்பா வர நானும் கீழே இறக்கி விட ஓடிச் சென்று அவர் கால்களுக்கு பின்னல் ஒளிந்துகொண்டது.

என் பத்து விரல்களையும் குஷ்டம் போல் மடக்கி இரு கைகளையும் காதோடு வைத்து சற்றே முகம் மாற்றி உற்ர்ர்ர்  என்க முழவதுமாய் தன்னை மறைத்துகொண்டது. அந்த ஆனந்த மனிதரைப் பார்த்து சற்ற சிரித்து நகர்ந்தேன்.
வெளி நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து பயணப்பட ஆயத்தமாகி ஒரு முறை திரும்பி பார்க்க, படியில் தனியே நின்று எனை பார்த்து கொண்டிருத்த குழந்தை "தேங்க்யு அங்கிள் " என சொல்லிச்சிரிக்க அன்று பெண் கடவுளும் கண்டேன்!!

Sunday, June 26, 2011

இதுதான் மனதோ

ஈரோட்டு சன் மியூசிக் தொகுப்பாளர் சூர்யா தமிழ் மேல் மரியாதை எற்படுதிக்கொண்டிருக்கிறார் !!

அவள் இல்லாத சோகத்தை
அவள் வீட்டு ரோஜா
வாடி உணர்த்துகிறது!!!

அன்பு அம்மாவிற்கும் அவர் தங்கைக்கும் இதோ பாடல்...
அருமையான வரிகள்!! ---நன்றி சூர்யா.,
[பாடல் : தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் வைத்தது.........]

------------------------------------------------------------------------------------------------------------------
பாலா எனும் மகாக் கலைஞன் மதிக்கும் சக மனிதனாக வளர்ந்து நிற்கும் அன்பு சூர்யாவிற்கும் அகரத்திர்க்கும் கோடானு நன்றிகள்!!!
இன்றைய உலகில் ஆண்கள் காதலித்து கண்ணீர்விட விரும்பும் இரு மனிதர்கள் ரஹ்மான் மற்றும் சூர்யா.,
வாழ்க நீவீர் வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
நலமுடன் வாழியவே!!!
------------------------------------------------------------------------------------------------------------------

எனது ஒலிப்பேழையில் இளையராஜாவின்..............................

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

இரவும் தமிழும் இளையராஜாவும் வாழ்க.........