Monday, September 16, 2013

ஏக்கம்



ரகசியமாய் அழுகிறேன்..........
அவசியமாய் சிரிக்கிறேன்..........
மருந்தாய் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை.......
நகர்கிறது தன் போக்கில் ......

காலத்தின் வேகத்தை சமநிலையில்
ஏற்றுகொள்கிறாய்..
உன்னால் மட்டும் எப்படி??

பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல...

வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய்....

விரைந்தோடும் காலநதியில்
விழிகள் மூடும் போதெல்லாம்
பணித்திரையாய் நினைவுகள்...........

பொழிந்தும் பொழியாமலும்
நினவுச்சாரல்கள் எப்பொழுதும்
மனதை ஈரமாக்கிக் கொண்டு ...........

உறங்க முடியாத கனவுகள் தந்தாய்......
தாயென தாலாட்டி உறக்கமும் தந்தாய்.....
வாழ்வு சுமைஎன்றேன்... பகிர்ந்து கொள் என்றாய்.....
இரவு விழித்ததில்லை... விழிக்க வைத்தாய்....

கவிதை படித்ததில்லை ... எழுத வைத்தாய்....
இத்தனை அன்பை மொத்தமாய் உணர்ந்ததில்லை ....
என்னுள் நுழைந்து ... நீயே உணர்த்தினாய்....
கனவிலும் காணாத உலகம் தந்தாய் ....

நினைத்தும் பார்க்காத... நினைவுகள் தந்தாய்
சிரித்து பேசியே சிரிக்க பழக்கினாய்...
இசையென பரவியே என் நெஞ்சம் நிரப்பினாய்....
உலகம் என்பதே உனக்காய் மாற்றினாய்..

சிரித்த கணங்கள் –சிலிர்த்த கணங்களாய்
மலர்ந்த கணங்கள் - உலகை மறந்த கணங்களாய்
என்மீது உறைந்த கணங்கள் - எனை உணர்ந்த கணங்களாய்
அணைத்த கணங்கள் - என் ஆனந்தக் கணங்களாய்......

உன் கைகோர்த்தபடி
மழையில் நனைய வேண்டும்......
மார்பில் சாய்த்தபடி
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்.......
மடியில் சாய்ந்தபடி
என் மரணம் வரை உறங்க வேண்டும.......

உன் கண்களில் வெளிச்சம் இருக்கும் தானே ...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும் தானே....
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும் தானே
நிச்சயம் இருக்கும்.......
இவை தேவதைகளுக்கான குணங்கள் ...
உனையன்றி யார் பெற்றிருப்பார் ...

அதிகம் காத்திருக்க வைக்காதே ....
வீணாவது உனக்கான காதல்தான்...

தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள் ...
உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்....
நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்....
முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
நானும் என் இதயமும்....

No comments: