Thursday, November 12, 2009

மதுரை டு தேனி [வழி ஆண்டிபட்டி]

இது ஒரு தமிழ் படம்.

எப்பொழுது திரையிடபட்டதென்று தெரியவில்லை., என்றோ எங்கோ எதிலோ இந்த படம் நன்றாக இருந்ததாக படித்த ஞாபகம் வர, 4 மணி அலுவலகம் முடிந்து தங்கியிருந்த அறை வரும் வழியிலேயே இந்த படத்தை இன்று பார்த்து விடுவதென்று முடிவு செய்துகொண்டேன்! நண்பர் அருகிலிருக்கும் town சென்டெரில் byerly's கடைக்கு போக அழைத்ததையும் மறுத்து, பனி கொட்டுவதால் எனக்கு வர mood இல்லை என்று பொய் சொல்லி படம் பார்க்க அமர்ந்தேன்.,

2 மணி நேர படம். நாயகன் நாயகி,இரு வீட்டார், ஒரு பேருந்து, மதுரை பேருந்து நிலையம், இடையில் உசிலம்பட்டி பின்னர் தேனி.. அதிக பட்சம் ஒரு 5 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே இருந்தது.,

எடுத்த எடுப்பிலயே நண்பனின் காதலுக்கு துணை பொய் காவல் நிலையத்தில் கைலியோடு வழக்கம்போல் நமது நாயகர். [அட என்னடா இது, இந்த படம் பார்ப்பதற்கு நண்பருடனே சென்றிருக்கலாம் என அப்பொழுது தோன்றியது]. நாயகனின் அண்ணன் வக்கீல். தம்பிக்கு ஒரு வாத்தியார் வேலை வாங்கிகொடுத்து தேனி அருகில் ஒரு கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார். மதுரை பேருந்து நிலையத்தில் நண்பருடன் அரட்டையில் இருக்கும்போது நாயகி அறிமுகம்., கதர் வெள்ளை வேட்டி சட்டை அப்பாவுடன் பாந்தமாக அறிமுகமாகிறார்., இந்த படத்திற்கும் கதைக்கும் ஏற்ற அறிமுகம். சபாஷ்.

இருவரும் ஒரு சோலைமலை பேருந்தில் மதுரையிலிருந்து தேனி பயணம். நீங்களும் நானும் அந்த வண்டியிலிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதே உணர்வு இப்பொழுதும். தொய்வு குறையாமலிருக்க வேண்டிய அளவு நகைச்சுவை அதுவும் எதார்த்தத்தோடு. நடத்துனர் rajnikanth, ஒற்றை கண் பாட்டி, பாக்யராஜ் பட பொடி வாண்டுகள் என பார்த்த முகங்களே இருப்பினும் அதிகமாக தொய்வு தெரியவில்லை. நாயகர் தான் நல்லவர் என்று நீருபிக்க போகும் வழியில் சில சந்தர்பங்கள், அதில் நாயகியின் காதல் ஒரு ஓரத்தில் ஒட்டி கொள்ள போகும் இடம் விட்டு நாயகயின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டு மனம் முடிப்பது கதை. ஆனால் இதை திரையில் கொண்டுவந்திருக்கும் விதம் அருமை.

கிராமத்து மக்களின் இயல்பு வாழ்க்கை, உரி வைப்பது, உசிலம்பட்டி, இடையில் ஏறும் கல்லுரி மாணவர்கள், குண்டு பெண்ணின் கோபம் என ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தி. மதுரை தொணி என்று சில இடங்களில் கூச்சல், மெதுவாக நகரம் திரைக்கதை என்று சில குறைகள் இருப்பினும், "Nobody is Perfect" என்னும் வாக்கிற்கேற்ப ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தில் 2 மணி நேரம் ஒன்றாக பயணம் சென்ற அனுபவத்தோடு நாமும் இந்த மண் வாசனை படத்தை ஆதரிப்போம்.

Tuesday, November 3, 2009

அமெரிக்கா....

பெரும்பானாலான தொழில்நுட்ப இன்ஜினியர்களின் கனவுகளில் ஒன்றான அமெரிக்கா பயணம், எனக்கும் சற்று சாத்தியமானது. கடந்த அக்டோபர் மாதம் பயணம்.


அதிகாலை மூன்று மணிக்கு தங்கியிருந்த அறையிலிருந்து அம்மா, அத்தை, நண்பன் புடை சூழ பெங்களூர் ஏர்போர்ட், அங்கிருந்து லண்டன் மார்க்கமாக சிக்காகோ, அதன் பின் ஒரு உள்ளூர் விமானம் பிடித்து minnessotta , அங்கிருந்து ஒரு 30 நிமிட கார் பயணத்தில் தங்க வேண்டிய விடுதி என மிக நெடிய பயணம்.

சனி ஞாயிறு விடுமுறை. முதல் நாள் களைப்பு முடிவதற்குள் நண்பரின் தொலைபேசி அழைப்பு அருகிலிருக்கும் கடைக்கு இட்டுச்சென்றது. Taco Bels, Rainbow, Walsgreen, Desi Foods, Walmart, Best Buy, Pizza Corner, Burger Kings, cici's pizza என அமெரிக்காவிற்கே உரித்தான பல junk food கடைகள்! ஒரு வார சமையலுக்கு தேவையான வெங்காயம், தக்காளி, மிளகாய், பால், பழங்கள் என ஒரு 30$ ஸ்வாகா [எந்த ஒரு பொருளையும் உடனே இந்திய ரூபாயோடு ஒப்பிட்டு பார்த்து சாமி நமஸ்காரம் பண்ணியும் இருந்திருந்தேன்] பண்ணி விட்டு தூக்கதோடும் சமயலோடும் முதல் நாள் இனிதே நிறைவுற்றது!!


அடுத்த நாள் கொஞ்சம் நான் அமெரிக்கா வாழ்கையை உள்வாங்க எண்ணி பக்கத்திலிருக்கும் இடங்களுக்கு ஒரு visit அடித்தேன்! St Paul என்னும் இடத்திற்கு ஒரு உள்ளூர் டாக்ஸி பிடித்து சென்றோம் [போக வர 60$.. அட ங்கோயலே] Thomson கம்பனியின் பாரம்பரிய WestLaw builiding, Capital Buidling, mississippi river மற்றும் உள்ளூர் வீதிகளில் ஒரு 3 மணி நேர நடை..

நன்கு plan பண்ணிய நாடு, சுத்தமான சாலைகள், அழகான புல்தரைகள், வசதியான கார்கள், அழகான பெண்கள் என எங்கும் ஒரு ரிச்னசுடன் காணப்பட்டது அமெரிக்கா! Richaagavum அழகாகவும் இருக்கும் அமெரிக்காவிடம் ஒரு உயிரோட்டம் இல்லாத உணர்வோடு நான் மேலும் சில நாட்களின் தனிமை தவத்தோடு.

Saturday, October 10, 2009

Diya

எப்பொழுதும் போல் அலுவலகம் முடிந்து நேற்றும் ஒரு 9 மணி அளவில் வீடு திரும்ப ஆயத்தமானேன். புதிய அலுவலக நண்பர் அஜய் ரமோலா நான் தங்கி இருக்கும் சில்க் போர்டு பக்கத்தில் குடியிருப்பதாகவும் தன்னை போகும் வழியில் இறக்கி விடுமாறும் கேட்டு கொண்டார்.. ஒரு 20 நிமிட பயணம் என்றே நினைக்கிறேன், அவர் சொல்லி வந்த விடயங்கள் சற்றே ஆச்சரியமாக இருந்தது..

பொதுவாக வட இந்தியர்கள் ஒரு முரட்டு குணம் கொண்டவர்கள் என்ற எண்ணம் என்னுள் இருந்திருந்தது., MS நான் BITS,பிலானியில் முடிக்க வேண்டிய தருணத்தில் project விடயமாக அங்க செல்ல வேண்டி இருந்தது. 6 நாள் பயணத்தில் 5-6 வட மாநிலங்களை பார்த்த பின் தான் அந்த எண்ணம் தவறு என்று பட்டது.. Panickers Travel என்னும் சுற்றுலா agency மூலம் இனியதளம் வழியாகவே முன்னேற்பாடு பயணத்தை பதிவு செய்திருந்தோம். இறங்கியது முதல் வந்து சேரும் வரை அவர்களின் பொறுப்பு. 5 நாட்களும் எங்களுக்கு ஓட்டுனராக பணி புரிந்த நண்பர் நாங்கள் கடைசியாய் கொடுத்த இனாம் 500 ரூபாயை வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொடுத்த போதும் சரி, ஒவ்வொரு வட இந்திய குடும்பமும் தங்களின் வீட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெரும் பொழுதும் சரி பிறரைபற்றிய நம் பொதுவான எண்ணங்கள் பெரும்பாலும் தவறு என்றே தோன்றுகிறது. 

கமல் சொன்னதுபோல் generalize பண்ணுவது மிக தவறு.

பயணத்தில் நண்பர் தான் ஒரு "Shri Ram Sharma Acharya" அவர்களின் சீடன் என்றும், All World Gayatri பரிவார் சங்கத்தின் தீவிர உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டுள்ளதாகவும், அதுவே தன் முதல் பணி என்றும் ஆணித்தரமாக கூறினார். "Shriram Sharma ஆச்சர்ய" அவர்கள் சிவனின் ஒரு பிறவியாக தான் நம்புவதாகவும் அவரின் ஆன்மா தங்களின் உறுப்பினர்கள் 10 கோடி பேரையும் வழி நடத்துவதாகவும், பொது தொண்டே அவர்க்கு நாங்கள் செய்யும் தொண்டு என்றும் கூறினார். தங்களின் இயக்கத்தில் உலக அளவில் சேவகர்களாக பலர் சேர்ந்துஇருப்பதாகவும் அதில் தமிழகம்தான் சிறந்த தொண்டாற்றி வருவதாகவும் கூறி வியப்படைய செய்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குழு, அவர்களுக்கு கீழ் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு குழு என வீதி வீத்யாக தாங்கள் வியாப்பிதிருப்பதாக புதிர் கூட்டினார். இயலாதவர்களுக்கு உதவுவது, பள்ளி கல்லுரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு போதனை என்று இவர்களது list நீண்டு கொண்டே போகிறது... "All World Gayatri Pariwar." என்பது சற்றே இந்து பேராக இருப்பதால், மற்ற இனத்தவரிடம் போதிய reach இல்லை என்பதற்காக இப்பொழுது புதிய இணையம் ஒன்றை தொடங்கி இருகிறார்கள்

உங்கள் பார்வைக்காக அது...
http://diya.net.in/
"DIVINE INDIA YOUTH ASSOCIATION"

ஆயிரம் கதைகளில் மனம் லயிக்கவில்லை என்ற பொழுதும் செய்கின்ற காரியம் நல்லதாக இருப்பதால் நமது வாழ்த்துக்களை பதிவிட்டு கொள்வோமாக!! பிடித்தவர்கள் மேற்சொன்ன இணையத்தில் தகவல்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நான் என்னை இதில் இணைத்து கொள்ளவில்லை :). அவரின் வேண்டுகோளுக்காக ஆந்தர வெள்ளத்திற்கு ஒரு சிறு தொகையும், ஒரு முறை ரத்த தானமும் செய்துள்ளேன்,

Just an attendance from myside for this society.
வளரட்டும் மனிதம்!

Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன்

உலகத்தரமான ஒரு படைப்பு.,

கமல் ஹாசன் மற்றும் மோகன் லால் இணைந்துள்ளார்கள் -  பல கோடி இந்திய மக்களுக்கும் தீவிரவாதத்தை பற்றிய அறிவை சற்றே அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்வதற்காக!

சற்றே சிறிய படமாயினும் சொல்ல வந்த கருத்தை நெத்தியில் அடித்தது போல் சொல்லியிருப்பது படத்தின் மிக பெரிய பலம். ஒரு சாதரண குடிமகனின் கோபத்தை இதை விட அழகாக இந்தியாவில் எந்த ஒரு நடிகராலும் நடித்திருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். கமல் ஒரு சகாப்தம் என்பதை மீண்டும் மீண்டும் நீருபித்து கொண்டிருக்கிறார். சற்றே பெரிய தாடியிலும் ஒரு மூக்கு கண்ணாடியிலும் அவ்வளவு பாந்தமாக இருப்பினும், கண்களின் தீர்க்கம் நமது முதுகு தண்டு ஆழம் வரை செல்கிறது. கமல் என்னும் கலைஞன் ஒரு தீர்கதரிசி. வளர்க இவன் தொண்டு.

நான் சற்றும் இளைத்தவனல்ல என்று மோகன் லாலும் பிரமிப்பை உண்டு பண்ணுகிறார். தீர்க்கமான முடிவுகள், உயர் அரசு அலுவலரான லக்ஷ்மியுடன் மோதல், IIT Drop Out ethical hackerஉடன் சில நிமிடங்கள், கதாநாயகனின் பாதுகாப்பு உரையாடல்,  im doing my duty என்று ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களபடுதுகிறார்.

வெடி குண்டு மிரட்டலை பற்றி முதலமைச்சரிடம் சொல்லி கொண்டிருக்கும்போது, "குண்டு வெக்கறன்னு சொல்றாங்களா" என்று கலைஞரின் சாயல் குரல் ஒலிக்கும்போது எழும் கரகோஷம் Raaj Kamal Internationalukku கிடைத்த கரகோஷம். Arif ஆக வரும் காவல்காரர், மிடுக்கான அவர் நண்பர், கமல், மோகன் லால், லக்ஷ்மி என சொல்லிக்கொள்ள 5 அல்லது 6 கதாபாத்திரங்கள், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதி, தமிழ்நாடு காவல்துறை அறை - இதை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக படம் வந்திருப்பதற்கு இரண்டே காரணங்கள்தான்.

1. உலகத்தரமிக்க நடிகர்கள் கமல் மற்றும் மோகன் லால்.
2. சொல்ல வந்த கருத்து :  "மதம் மற்றும் தீவிரவாதம் ஒழியட்டும், மனிதம் வளரட்டும்"

ஸ்ருதி ஹாசன் படத்திற்கு இசை. முதல் படத்தில் இவ்வளவு நேர்த்தியா என அட போட வெக்கும் ரகம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருப்பது முஸ்லிமும்மல்ல, இந்துவுமல்ல, தமிழனுமல்ல ஒரு சராசரி இந்திய குடிமகன் தான் என்று உணர அனைவரும் கண்டிப்பாக  பார்க்க வேண்டிய படம்.

அழகிய தமிழ் மகன் , மாசிலாமணி,  போன்ற படங்களை எடுப்பவர்களும் சரி, விளம்பரம் செய்பவர்களும் சரி இது போன்ற படங்களை பார்த்தாவது தங்கள் மனசாட்சி படி நடந்துகொள்வது மிக உத்தமம் என்றே தோன்றுகிறது.






Sunday, August 16, 2009

Brunch


விக்கி தலைவர் கிட்ட Brunch னா என்னன்னு கேட்டு பார்த்தேன்., காலை உணவையும் மதிய உணவையும் சேர்த்து சாபிடுவதுன்னு போட்ருந்துது..

காலைல ஒரு 11:30 மணிக்கு நம்ம தோஸ்து போன் பண்ணிருந்தாப்ல, அப்டியே பேசும்போது சாப்டயாடன்னு கேட்டான். ஞாயித்து கிழமை பெட்டவிட்டு எந்திரிக்கவே ரொம்ப சிரமம் இதுல எங்க போய் பாஸ்ட பிரேக் பண்ணறது. ஒரே கடுப்ல, இல்லைன்னு சொன்னேன்..

" Break Fast , Lunch எல்லாம் ஒட்டுக்கா ஒரு 12:30 மணிக்கு சாப்ட வேண்டியதுதான்", பசங்க வாழ்கைல இதெல்லாம் சாதரனம்டான்னு சொல்லும்போது தான் அவன் என்னடா breakfast, lunch எல்லாம் ஒண்ணா சேர்த்து "Brunch"ஆ அப்டினான். இந்த தமிழ் கலந்த இங்கிலிஷ தங்க்ளிஷ்ன்னு சொல்லுவோமே அந்த மாதிரி தான் இதுவும்ன்னு நெனச்சிட்டிருந்தேன் இப்போ வரைக்கும்.. ஆனா விக்கி தலைவர் அது தப்புதான்னு புரிய வெச்சாரு..

எதோ காலைல இத பத்தி எழுதனும்னு தோனுச்சு ஆனா இப்போ வேற மாதிரி எழுதிட்டேன்..

படிச்சிட்டு இத மட்டும் நல்ல ஞயாபகம் வெச்சுகோங்க "Brunch" நா இந்த bachelor யூத் சோம்பேறி பசங்க மொடபட்டுட்டு சண்டே ஆடி ஆசஞ்சு இந்த காலைல மதிய சாப்பாடு ரெண்டையும் சேர்த்து ஒண்ணா சாப்பிடுவாங்களே அதேதான்!!! 

Friday, February 27, 2009

I......

I . . .My words cannot express, The feelings I hold.
Let them be unsaid, Let the thoughts be not unfold.

Over and over again, I think of my past.
If I love someone now, It may not ever last.

When the cold winds blow, It's she whose on my mind.
The thoughts on her are deepened, My feelings, soft and kind.

The moon blossoms, by the fall of the night.
My sorrows grieve, And I cannot even fight.

Beautiful is my world, Lonely are my dreams.
Past, still on, I mourn, My tears still flow instreams.

Let me be the same, Try not me to change.
I believe in what I have, Let our feelings not be exchanged . . .

Wednesday, February 11, 2009

Bug-bite


The war was suddenly launched. The provocation on the previous night was the reason for this sudden attack. For so long, there was no one to contend with and none to wage a war with. This time, once there was a realization, swift actions were taken.


The enemy territory was not huge by any means, but their army power in sheer numbers surprises anyone. 
"If you dont have the numbers, you better play clever in the battle". They definitely followed that - they had secret hideouts, surprise weaponry and some Weapons of Mass Destruction's hidden.
But there I was, with a HIT in my hand and host of Mootai-pooochi's in my bed to contend with. (Mootai poochi = bed bug).
Engenthu thaan vanthutho, and I dont know how on earth did I not even feel their effects for so long.
Anyways yesterday was mootai-poochi cleaning day and at the end of it, even though I was tired, sleeping again on the same bed seemed repelling to me. I just hope, I did not miss a male and female in the bed itself. After all, I can only claim victory for a week, they will come back in full force. 

Friday, January 16, 2009

Vrooooom

I wanted to reach 105kmph in my bike yesterday.

My new wife - Apache RTR 160, smiled at me showing 10,000kms in odometer when I was on my way to office in the Intermediate Ring Road. I said to myself..” I wanted to touch 105kmph speed today - right now”… Blimey and I ripped my bike immediately out of excitement. Its just that until a 10-15yr old kid riding bi-cycle came into my way, I didn’t know that I wont “meet expectations” this time.




With all that been old memories, this morning I managed to touch 106kmph just to satisfy my greedy, impatient soul and now back into usual routines of deadline, meetings, resource management, productivity, Peppusi, coooo[yawn]khhhhhhh ..